தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பால்துரைக்கு சர்க்கரை நோயின் தீவிரம் அதிகரித்ததன் காரணமாகவும், தாமஸ் பிரான்சிஸுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாகவும், இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம்: சிகிச்சையில் இருக்கும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை! - sathankulam cops arrest
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்களிடம் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார்.
![சாத்தான்குளம் சம்பவம்: சிகிச்சையில் இருக்கும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை! சாத்தான்குளம் சம்பவம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7956946-thumbnail-3x2-tut.jpg)
சாத்தான்குளம் சம்பவம்
தூத்துக்குடி மருத்துவமனையில்
தற்போது சிகிச்சையில் இருக்கும் இருவரிடமும் தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினார். மேலும், மருத்துவமனையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னரே, அவர்கள் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சாத்தான்குளம் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது!