தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரணியில் மிதந்த உடல் - தூத்துக்குடியில் பரபரப்பு - thoothukudi district news

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள செவல்குளம் ஊரணியில் ஆண் உடல் ஒன்று மிதந்ததால் அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செவல்குளம் ஊரணியில் ஆண் சடலம்  தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  கோவில்பட்டிச் செய்திகள்  thoothukudi district news
தூத்துக்குடியருகேயுள்ள ஊரணியில் மிதந்த ஆண் சடலம்

By

Published : Jan 4, 2020, 5:01 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த முடுக்கலாங்குளம் தெற்கே உள்ள செவல்குளம் ஊரணியில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக கொப்பம்பட்டி காவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கு பின்பு நடத்திய விசாரணையில், ஊரணியில் இறந்தநிலையில் மிதந்தவர் முடுக்கலாங்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் அரிச்சந்திரன்(30) என்பது தெரியவந்தது. மதுவுக்கு அடிமையான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த மூன்று வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார்.

தூத்துக்குடியருகேயுள்ள ஊரணியில் மிதந்த ஆண் சடலம்

இந்நிலையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி காலை வீட்டைவிட்டுச் சென்றவர் மது அருந்திய நிலையில் ஊரணியில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details