தூத்துக்குடியில் கரோனா தொற்றின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்பாகம் காவல் நிலையத்தில் காவல் நிலைய எழுத்தர் உள்பட 3 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்ற காவலர்கள் மத்தியிலும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.