தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, காணொலி கண்காணிப்புக்குழு, செலவினங்கள் சரிபார்க்கும் கணக்கு குழு ஆகிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 4) நள்ளிரவு மேற்கண்ட குழுவினர் செய்துங்கநல்லூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநெல்வேலியிலிருந்து வந்த காரை சோதனையிட்டனர்.