தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகளை அகழாய்வுப் பணியில் செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிப்பு - முக்கிய செய்திகள்

தூத்துக்குடி: சிவகளையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகளும், செங்கல் கட்டுமான அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகளை அகழாய்வுப் பணி
சிவகளை அகழாய்வுப் பணி

By

Published : Aug 17, 2021, 2:54 PM IST

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி கடந்த ஆறு மாதங்களாக இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பரம்பு பகுதியில் 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர்ந்து வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக பொட்டல் கோட்டை திரடு, ஆவாரங்காடு திரடு, பராக்கிரமபாண்டி திரடு உள்பட ஐந்து இடங்களில் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் ஏராளமான பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பொட்டல் கோட்டை திரடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் மூன்று குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் குழியில் மேல் மட்டத்தில் 300 ஆண்டுகள் பழமையான செங்கற்கள் காணப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து கீழே தோண்டப்பட்ட குழியில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மண் செங்கல் கட்டுமான அமைப்பு கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டது. இது இரண்டு அடுக்குகளாக செல்கிறது.

சிவகளை அகழாய்வுப் பணி

இந்நிலையில், இதனைத் தோண்டி ஆய்வு மேற்கொள்ளும்போது மேலும் பல பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் மாத இறுதி வரை இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முரசொலி மாறன் பிறந்தநாள்: உலக அரங்கில் வளரும் நாடுகளுக்காக ஓங்கி ஒலித்த ’கலைஞரின் மனசாட்சி’!

ABOUT THE AUTHOR

...view details