தூத்துக்குடி, நாசரேத் அருகிலுள்ள வெள்ளமடம் முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன் (44 ). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். ஓராண்டிற்கு முன் கண்ணனின் மனைவியிடம் சார்லஸ் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் கண்ணனுக்கும் சார்லஸுக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
சம்பவத்தன்று சார்லஸ் மனைவிக்கும் கண்ணன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கண்ணன் தனது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சார்லஸ் வழிமறித்து கண்ணனிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி சார்லஸ் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.