தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக சிலம்பாட்டப் போட்டியில் வெற்றிவாகை சூடிய மாணவிகளுக்கு பாராட்டு விழா! - வெண்கல பதக்கம் வென்ற பள்ளி மாணவிகள்

தூத்துக்குடி: மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பாட்ட போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விந்தியா, மீராலட்சுமி ஆகிய இரு மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

வெற்றிவாகை சூடிய மாணவிகளுக்கு பாராட்டுவிழா

By

Published : Oct 10, 2019, 10:58 PM IST

உலக சிலம்பாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பள்ளி மாணவிகள் விந்தியா, மீராலட்சுமி ஆகியோருக்கு கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

மலோசியாவில் கடந்த 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை உலக சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, கம்போடியா, பங்களாதேஷ், நேபாள் நாடுகளை சேர்ந்த 420 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் அகில இந்திய சிலம்பம் சம்மேளனத்தைச் சேர்ந்த 120 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் 10-14 வயதுள்ள, 25-28 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்ட விந்தியா, நடுகம்பு தனித்திறமை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெற்றிவாகை சூடிய மாணவிகளுக்கு பாராட்டுவிழா

இதே போன்று 50 -55 எடைப்பிரிவில் கலந்துகொண்ட மீராலெட்சுமி, நெடுங்கம்பு தனித்திறமை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். நாடு திரும்பிய இரு மாணவிகளுக்கும் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற இரு மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. மேலும் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள், அவர்களது பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

இதையும் படிக்கலாமே: இஸ்ரோ வடிவில் நின்று கல்லூரி மாணவர்கள் கின்னஸ் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details