தூத்துக்குடி மாவட்டம் சுப்பையா முதலியார்புரம் 4ஆவது தெருவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருள்கள் அதிகளவில் வருவதாக அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான அலுவலர்கள் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் திடீர் சோதனைச் செய்தனர்.