தமிழ்நாடு

tamil nadu

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

By

Published : Jul 2, 2020, 5:53 PM IST

Updated : Jul 2, 2020, 6:02 PM IST

தூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்ற நான்கு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 Persons dies while cleaning sewage tank
4 Persons dies while cleaning sewage tank

தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரகுடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா, ஆலங்குளத்தைச் சேர்ந்த பாண்டி, தினேஷ், பாலா ஆகிய நான்கு பேர் தங்களது வாகனத்தில் வந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர்களில் இரண்டு பேர் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளனர். உள்ளே இறங்கிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் வெளியே நின்றிருந்த மற்ற இருவரும் தொட்டிக்குள் இறங்கியுனர். ஆனால், அவர்களும் துருதிருஷ்டவசமாக மரணமடைந்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் நால்வரும் வெளியே வராத காரணத்தால் சோமசுந்தரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்துவந்த தீயணைப்பு மீட்புப் படையினர் பாதுகாப்பாக தொட்டிக்குள் இறங்கி உயிரிழந்த நால்வரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து தட்டப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு

Last Updated : Jul 2, 2020, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details