தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 300 கிலோ கடல் அட்டை கடத்தல் - கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல்

தூத்துக்குடி: குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

arrest
arrest

By

Published : Jan 5, 2021, 5:39 PM IST

தூத்துக்குடி லூர்தம்மாள் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான குடோன் ஒன்றின் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த மினி லாரியை இரவு ரோந்து பணிக்கு சென்ற தாளமுத்து நகர் காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 300 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் கடல் அட்டை இருந்த வாகனத்தின் குடோன் காவலாளியை பிடித்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சுமார் எட்டு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்யப்பட்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

300 கிலோ கடல் அட்டை

இந்த கடல் அட்டைகள் எங்கே பிடிக்கப்பட்டது எங்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சியினர் பேனர்: திமுக முறையீடு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details