தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியநாயகிபுரத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி பப்பாளி (20), முனீஸ்வரன் (21) ஆகியோர் முருகேசன்(36) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் செப்டம்பர் 13ஆம் தேதி கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன் (20) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.