தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 24 பேர் கைது! - etv news

தூத்துக்குடி: சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 24 பேர் கைது செய்யப்பட்டு, 610 மதுபாட்டில்கள், 8 லிட்டர் மதுபான கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 24 பேர் கைது!!
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 24 பேர் கைது!!

By

Published : May 18, 2021, 2:39 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (மே.17) மதுவிலக்கு சம்பந்தமாக காவல் துறையினர் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டதில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சுமார் 340 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, முத்தையாபுரம், முறப்பநாடு, கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு, கழுகுமலை, கயத்தாறு, நாலாட்டின்புதூர், விளாத்திகுளம், குளத்தூர், எட்டையபுரம், சாத்தான்குளம் மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்குப் பிரிவு ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 24 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 610 மதுபாட்டில்கள், 8 லிட்டர் கள், ரூ. 3070/- பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டால் சார் ஆட்சியர் மிரட்டுகிறார்: அமைச்சர் முன்னிலையில் மருத்துவர் கண்ணீர்

ABOUT THE AUTHOR

...view details