தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sugarcane Farmers Suffer in TN: அடிமாட்டு விலைக்கு கரும்பு கொள்முதல் - பி.ஆர். பாண்டியன் கண்டனம் - கரும்பு கொள்முதல் பிஆர்பாண்டியன் கண்டனம்

Sugarcane Farmers Suffer in TN: பொங்கல் பரிசில் கரும்பு ஒன்றுக்கு ரூ.33 அரசு விலை நிர்ணயம் செய்துள்ளபோது, கூட்டுறவுத் துறை ரூ.15-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதாக பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி
பி.ஆர்.பாண்டியன் பேட்டி

By

Published : Dec 30, 2021, 6:04 PM IST

Sugarcane Farmers Suffer in TN: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது செய்தியாளரிடம் பேசிய அதன் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், "தமிழ்நாட்டில் மறந்துபோன பாரம்பரிய விவசாய முறைகளை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், இந்தியா முழுவதிலும் அதனை இயக்கமாகக் கொண்டுசெல்ல முயற்சி எடுத்தவர் நம்மாழ்வார். அவரது கொள்கையை உலக நாடுகள் பலவற்றிலும் இன்று பின்பற்றுகிற நிலையை உருவாக்கியவர்.

விவசாயம் முடங்காது

தற்போதைய விவசாய உற்பத்தி முறைகள் நஞ்சாகிவிட்டன; மனிதனை நோயாளிகளாக மாற்றிவிட்டன; விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை நஞ்சாக்கிவிட்டன. நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டிய பொறுப்பு விவசாயிகளுக்கும், அரசுக்கும் இருக்கிறது.

அரசு இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்தி பாரம்பரிய வேளாண்மை முறைகளைக் கொண்டு உணவு உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த உலகமே முடங்கினாலும் விவசாயம் முடங்காது.

பி.ஆர். பாண்டியன் பேட்டி

விவசாயிகள் உற்பத்தி செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்று 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தெரிவித்த நம்மாழ்வாரின் கருத்து இன்று கரோனாவால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு மத்திய அரசு நம்மாழ்வாரின் கொள்கையைப் பின்பற்றி பாரம்பரிய விவசாயம் இயற்கை உரங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அடிமாட்டு விலை

தமிழ்நாடு அரசு நம்மாழ்வார் வழியைப் பின்பற்றி தஞ்சாவூரை மையமாக வைத்து அவர் நினைவாக இயற்கை விவசாய ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும். பொங்கல் பரிசில் கரும்பு ஒன்றுக்கு ரூ.33 அரசு விலை நிர்ணயம்செய்திருக்கிறது.

ஆனால் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கிராமப் பகுதி விவசாயிகளிடம் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் விலை கொடுத்து அடிமாட்டு விலைக்கு கொள்முதல்செய்கின்றனர். இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

நகைக்கடன்

நகையை அடகுவைத்து கடன் பெற வேண்டிய நெருக்கடியில் இருந்த விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நான்கு விழுக்காடு வட்டியில் கடன் பெற்றிருக்க முடியும்.

ஆனால் திமுக தேர்தல் அறிக்கையை நம்பி விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடனைப் பெற்றனர். தற்போது அவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கூட்டுறவு வங்கிகள் 13 விழுக்காடு வட்டி போட்டு வசூல்செய்கின்றன.

எனவே விவசாயிகள் நலன்கருதி வட்டியை மட்டுமாவது தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் அசலை பெற்றுக்கொண்டு நகைகளைக் கடன் பெற்ற விவசாயிகளுக்குத் திரும்ப வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:மதமாற்றத்தைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details