தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செயற்கையை மறுத்து இயற்கை வேளாண்மையில் அசத்தும் நன்னிலம் உழவர் - திருவாரூர் நன்னிலம் இயற்கை விவசாயம் செய்யும் விவாயி

நன்னிலம் அருகே நான்கு புறமும் செயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் மத்தியில் எவ்வளவு மழை அடித்தாலும் சாயாமல் கம்பீரமாக நிற்கும் கருப்பு கவுனி நெல்லை இயற்கை முறையில் விவசாயி ஒருவர் செய்து அசத்திவருகிறார்.

கருப்பு கவுணி நெல், Tiruvarur Nannilam Farmer culltivated Natural Paddy Crops, Black sorghum paddy
இயற்கை இலாபமும் தருகிறது...

By

Published : Feb 2, 2022, 6:39 AM IST

Updated : Feb 2, 2022, 7:10 AM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தலையூர், கதிராமங்கலம், பூங்காவூர், குருங்குளம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செயற்கை முறையில் சம்பா தாளடிப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தலையூர் பகுதியின் நடுவே இரண்டு ஏக்கர் பரப்பளவில், ராஜா என்ற விவசாயி, இயற்கை முறையில் கருப்பு கவுனி நெல் சாகுபடி செய்துவருகிறார். தனது வயலின் நான்கு புறமும் செயற்கை முறையில் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் மத்தியில், நான்கு ஆண்டுகளாக புது புது நெல் ரகங்களை சாகுபடி செய்துவருவதாகக் கூறுகிறார்.

இயற்கை விவசாயி ராஜாவின் வயல்

இயற்கை லாபமும் தருகிறது

தற்போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெய்துவந்த கனமழையின்போது சம்பா தாளடி நெற்பயிர்கள் சேதமடைந்து வயலில் முளைக்கத் தொடங்கின. ஆனால், இயற்கை முறையில் செய்யப்பட்ட கருப்பு கவுனி நெற்பயிர்கள் முழுவதும் எந்த ஒரு சேதமும் இல்லாமல் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராஜா.

செயற்கையை மறுத்து இயற்கை வேளாண்மையில் அசத்தும் நன்னிலம் உழவர்

மேலும், இயற்கை முறையில் செய்யக்கூடிய நெல்லின் விலை கூடுதலாக கிலோ ஒன்றுக்கு 150 முதல் 170 ரூபாய்க்குப் போவதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகளவில் தரும். எனவே, அனைத்து விவசாயிகளும் இயற்கை முறைக்கு மாற வேண்டும் என ராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.

இயற்கையாக விளையும் கருப்பு கவுணி நெல்

எனவே, தமிழ்நாடு அரசு இயற்கை முறை விவசாயம் குறித்து பொதுமக்களிடையேயும் விவசாயிகளிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முன் வர வேண்டும் என்று இயற்கை விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அறுவடை முடிந்தும் சோகம்; நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை

Last Updated : Feb 2, 2022, 7:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details