தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 19, 2020, 5:49 PM IST

ETV Bharat / state

மன்னார்குடியில் மூன்று குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

திருவாரூர்: மன்னார்குடி அருகே இரண்டு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்த மூன்று குழந்தைத் தொழிலாளர்களை அரசு அலுவலர்கள் மீட்டு பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Child labor  three child labour rescue from bike mechanic shop in mannarkudi  மன்னார்குடியில் குழந்தைத் தொழிலாளர் மீட்பு  குழந்தைத் தொழிலாளர்கள் மூவர் மீட்பு
குழந்தைத் தொழிலாளர்கள் மூவர் மீட்பு

மன்னார்குடி- பந்தலடி பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் 18 வயதுக்கு கீழுள்ள மூன்று சிறுவர்கள் வேலை பார்த்து வருவதாக அரசு அலுவலர்களுக்கு தகவல் வந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார தஞ்சை இணை இயக்குனர் சித்தார்த்தன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கடைக்கு சென்றனர்.

அப்போது, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த கதிரவன்(14), கவியரசன்(16), ஹரிகரன்(15) ஆகிய மூன்று சிறுவர்களை மீட்டு 1098 சைல்டு லைன் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மூவரும் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு வந்ததால் அவர்கள் படித்த பள்ளி நிர்வாகத்திடம் பேசி பள்ளியில் மீண்டும் அலுவலர்கள் சேர்த்துவிட்டனர்.

மூன்று குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

வாகனம் பழுதுபார்க்கும் கடையில் வேலைபார்த்த மூன்று குழந்தைத் தொழிலாளர்களை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தனியார் பேருந்தை சிறைப்பிடித்த அரசு அலுவலர்கள்

For All Latest Updates

TAGGED:

Child labor

ABOUT THE AUTHOR

...view details