திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி பகுதியில் பெண் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாகவும், அதுகுறித்து காவல் துறையினருக்கும் அப்பகுதியினர் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து சாராய விற்பனை நடந்துவருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விளக்குடி முக்கியச் சாலையில் குறுக்கே கயிறு கட்டி அதில் கள்ளச்சாராய பாட்டில்களை தொங்கவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி பழனிச்சாமி, ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட காவல் துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.