தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கடை நீரில் சாகுபடி செய்து வரும் விவசாயிகள்

திருவாரூர்: மேட்டூரிலிருந்து வரும் காவிரி நீரை நம்பாமல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை நீரில் சாகுபடி செய்து வரும் கிராம மக்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இங்கே...

By

Published : Oct 28, 2020, 5:32 PM IST

Updated : Oct 29, 2020, 7:25 PM IST

Drainage water issue
Thiruvarur farmers

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் தான் பிரதானத் தொழில். குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெரும்பாலானோர் மேட்டூர் காவிரி நீரையும், மழைநீரையும் நம்பியே அதிக அளவில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள மேலப்பேட்டை, கீழே பேட்டை, பழவர்ணக்குடி உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.

சாக்கடை நீரில் சாகுபடி செய்து வரும் விவசாயிகள்

ஓடம்போகியாற்றிலிருந்து பிரிந்து வரும் சுக்கனாறு வாய்க்கால் காவிரி நீரை நம்பி, இந்த மாவட்ட விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனென்றால், மேட்டூர் அணை தண்ணீர் வராததாலும் உரிய நேரத்தில் மழை பெய்யாமல் போனதாலும் இந்தப் பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர்.

பயிர்கள் சேதம்

விவசாயத்தையே பிரதானமாக நம்பி இருக்கும் சுக்கனாறு வாய்க்கால் சரியாக தூர்வரப்படாமல் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பி வழிகின்றது. திருவாரூர் நகராட்சியில் கொட்டப்படும் குப்பைகள், மருத்துவக் கழிவுகளால் சாக்கடையாக மாறி, வாய்க்கால் முழுவதும் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் கொஞ்சமும் இல்லாமல் போனது.

பாசனத்திற்குப் பயன்படுத்தவேண்டிய நீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதால், அந்நீரை வடிகட்ட தடுப்பு அமைத்து இன்ஜின் வைத்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடிக்குப் பயன்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சாக்கடை நீரை வடிகட்ட தடுப்பு

இதனால் அடிக்கடி பயிர்கள் கருகி விடுவதாகவும் அதிக மகசூல் இழப்பு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், மண் மலட்டுத்தன்மை அடைந்து விடுவதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாக்கடை நீரில் சாகுபடி

சுக்கனாறு வாய்க்காலைத் தூர்வாரி சாக்கடைக் கழிவுகளை கொட்டவிடாமல் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உரிய நேரத்தில் மேட்டூரிலிருந்து காவிரி நீர் வருவதற்கான வாய்ப்பு உருவாகும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:’இஞ்சி, பூண்டுதான் பூச்சிக்கொல்லி... மாட்டுச் சாணம், கோமியம்தான் உரம்’ - இயற்கை விவசாயம் செய்து பிரமிக்க வைக்கும் தம்பதி!

Last Updated : Oct 29, 2020, 7:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details