தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்த திமுக எம்.எல்.ஏ - வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து

திருவாரூர்: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் சால்வை அணிவித்து தனது நன்றியை தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ

By

Published : May 31, 2019, 2:54 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இதில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பூண்டி கலைவாணன் 64 ஆயிரத்து 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தனது வெற்றிக்கு காரணமாக விளங்கிய திருவாரூர் அருகே வடகண்டம், திருக்கண்ணமங்கை, காட்டூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன்

மேலும் அப்பகுதி மக்கள், பூண்டி கலைவாணனுக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு அவர் வாக்காளர்களுக்கும் சால்வை அணிவித்து தனது நன்றியை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details