தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 30, 2020, 9:02 AM IST

ETV Bharat / state

திருவாரூரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 36 பேருக்கு கரோனா!

திருவாரூர்: மாவட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 36 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது.

tvr medical
tvr medical

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் பிரிவில் பணியாற்றிவந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நன்னிலத்தில் ஐந்து பேர், மன்னார்குடியில் நான்கு பேர், திருத்துறைப்பூண்டியில் ஒன்பது பேர், குடவாசலில் நான்கு பேர் உள்பட மொத்தம் 36 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 464ஆக அதிகரித்துள்ளது. இதில் 153 பேர் சிகிச்சைப் பெற்று முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, அரசு மருத்துவமனைகளில் 311 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்: நோய்த்தொற்று ஏற்படும் இடர்!

ABOUT THE AUTHOR

...view details