தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல் - Road pickup by Tasmac in Thiruvarur

திருவாரூர்: நாரணமங்களம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீரென சாலை மறியல்

By

Published : Nov 21, 2019, 12:05 AM IST

திருவாரூர் மாவட்டம் குடவாசலையடுத்து நாரணமங்களம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக்கால் பெண்களும், பள்ளிக் குழந்தைகளும் அவ்வழியாக சென்று வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடையை மூட வலியுறுத்தி இரண்டு மாதத்திற்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் டாஸ்மாக் தரப்பினர் 45 நாட்களில் கடையை மாற்றி விடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதத்திற்கு மேலாகியும் கடை மூடப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீரென சாலை மறியல்

இதனையடுத்து காவல்துறையினர், டாஸ்மாக் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மாதத்திற்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவோம் என்று உறுதியளித்த பின் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details