தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - மாணவர்கள் கண்டன உள்ளிருப்புப் போராட்டம்! - அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் : ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுவதைக் கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம்

By

Published : Sep 16, 2019, 4:42 PM IST

ஐந்தாம் , எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவுசெய்து மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து அந்தந்த மாநிலங்களில் முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

இதற்குப் பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஐந்தாம், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details