தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எலிக்கு வைத்த மருந்தைச் சாப்பிட்ட சிறுவர்கள் - உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை - Treating students in Thiruvarur life-threatening condition

திருவாரூர்: எலிக்கு வைத்த மருந்தைச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

By

Published : Feb 12, 2020, 3:46 PM IST

திருவாரூர் மாவட்டம் தலையாமங்களம் அருகே உள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன்கள் கிஷோர் (8), ஜஸ்வின் (6) மற்றும் செந்தில் குமார் (5). இவர்கள் மூவரும் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்நிலையில் பள்ளி செல்ல தாமதமானதால் அவர்கள் வீட்டில் அருகில் இருந்த பாசமலர் என்பவரின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவர்கள் மூவரும், அங்கிருந்த அரிசியை எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பாசமலர் அரிசி சிதறி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்தார். அதில் சிறுவர்கள் மூன்று பேரும் எலிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எலி மருந்து கலந்த அரிசியை சாப்பிட்டது தெரியவந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை

இதனையடுத்து அவர் சிறுவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் பெற்றோர், மூவரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மூவரையும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பேராசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலைக்கு முயற்சித்த மாணவன்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details