தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா! - Saraswati Pooja

உலக பிரசித்திபெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழாவானது கொண்டாடப்பட்டது.

சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் காட்சி
சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் காட்சி

By

Published : Oct 25, 2020, 8:03 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சரஸ்வதி பூஜை விழா என்பது ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் கரோனா அச்சத்தால் அரசின் வழிகாட்டுதலின்படி தகுந்த இடைவெளியுடன் பக்தர்கள் கோவிலினுள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது என்றால் அது கூத்தனூரில்தான். ஒட்டக்கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைத்தபின் இந்த தளத்தில் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது என வரலாறு உள்ளது. இந்த வருடம் நவராத்திரி நிகழ்ச்சிகள் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 9-வது நாளான இன்று சரஸ்வதி பூஜை பாத தரிசனம் நடைபெற்றது.

சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் காட்சி
ஒவ்வொரு நாட்களும் நடைபெறுகின்ற கலை நிகழ்சிகள் கரோனா அச்சத்தின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. சரஸ்வதி கோயிலுக்கு வருபவர்கள் நோட்டு புத்தகம், பேனா, சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச் செல்வது வழக்கம். ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் குழந்தைகளை பெற்றோர்கள் விஜயதசமியன்று இங்கு அழைத்து வந்து சரஸ்வதி அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். இந்த வருடம் கரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து குறைவான பக்தர்கள் மட்டுமே தகுந்த இடைவெளியுடன் தரிசனம் செய்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details