தமிழ்நாடு

tamil nadu

அரசுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்: ஆர். காமராஜ் எம்.எல்.ஏ

By

Published : May 29, 2021, 9:53 PM IST

சென்னை: அரசு எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும் என முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்
அரசுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம், வலங்கைமான், குடவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக அரசு கரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக கையாண்டது.

தற்போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசு எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்" என்றார்.

இதையும் படிங்க: அனைத்துநிலை ஊடகவியலாளர்களுக்கும் கரோனா ஊக்கத்தொகை: வலியுறுத்தும் சீமான்!

ABOUT THE AUTHOR

...view details