திருவாரூரை அடுத்த நீலக்குடியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து இன்று மாலை திடீரென்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் உருவ பொம்மையை மாணவர்கள் எரித்துள்ளனர்.
இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு தொடர் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் அறிவித்தது மட்டுமல்லாமல் விடுதியில் தங்கிருக்கும் மாணவர்களையும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.