தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வர வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம்! - Thiruvarur protest

திருவாரூர்: பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் பேரணியாகச் சென்று பேருந்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

thiruvarur protest
திருவாரூரில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 26, 2019, 7:11 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளமல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், நகரப் பேருந்துகள் தவிர்த்து மற்ற புறநகர் அரசுப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து அலுவலர்கள் எனப் பலரிடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து, வர்த்தக சங்கத்தினர் மற்றும் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட கட்சியினர், பொதுமக்களும் இணைந்து புதிய ரயில் நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்தகழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூரில் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில், வர்த்தக சங்கத் தலைவர் பாலு தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பிக்கொண்டு பேரணியாகச் சென்றனர். மேலும், அவர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அல்லது காலம் தாழ்த்தப்பட்டால் பொது மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details