திருவாரூர்: நன்னிலம் அருகே பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு தலைமை சீன குங் - பூ ஆசிரியர் பாண்டியன் தலைமையில் பேரளம் அரசு பள்ளி தலைமையாசிரியர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்கள், குழந்தைகள் அனைவரும் குங் - பூ தாய்ச்சி, சிலம்பம், ஈட்டி சுழற்றுதல், நுன்ஜாக் சுற்றுதல், தண்டால் உள்ளிட்டவைகளை செய்து காட்டி அசத்தினர்.