தமிழ்நாடு

tamil nadu

ஜெயலலிதா மரண வழக்கு: முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்!

By

Published : Mar 16, 2021, 1:32 PM IST

திருவாரூர்: "ஜெயலலிதா மரணத்திற்கு நான் தான் காரணமென்றால் என்மீது வழக்கு தொடருங்கள், நான் சந்திக்கத் தயார். முதலமைச்சர் தயாரா?" என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மரண வழக்கு: முதலமைசருக்கு முக ஸ்டாலின் சவால்!
ஜெயலலிதா மரண வழக்கு: முதலமைசருக்கு முக ஸ்டாலின் சவால்!

திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூரில் போட்டியிடும் வேட்பாளர்களான பூண்டி. கலைவாணன், மன்னார்குடி தொகுதி டீ.ஆர்.பி. ராஜா, நன்னிலம் தொகுதி ஜோதிராமன், திருத்துறைப்பூண்டி தொகுதி மாரிமுத்து ஆகியோரை திருவாரூர் அறிமுகம் செய்து வைத்து, தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், “கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் திருவாரூரில்தான் பரப்புரையை தொடங்கினேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இங்குதான் தொடங்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலை போல சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியை தேடித் தரவேண்டும். கடந்த மாதம் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறினேன் இன்றைய நிலையில், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலை உள்ளது. இதனை பத்திரிகையாளர்களே கூறிவருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை சீரழித்து வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்தார். வழக்கு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் 5 ஆண்டுகாலம் ஜெயலலிதா இருக்கும்போதே வீணடிக்கப்பட்டது. பின்னர் வந்த ஐந்து ஆண்டு காலத்தில் உடல் நலிவுற்று மறைந்தார். அதனையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் பரப்புரையில் ஜெயலலிதா இறப்பிற்கு காரணம் மறைந்த தலைவர் கருணாநிதியும், நானும்தான் என அவர் கூறியுள்ளார். இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று ஜெயலலிதாவின் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, உடல் நிலை குறித்து வெளியில்கூட சொல்ல வழியில்லாத நிலையில், ஆட்சி நடத்தியவர்கள் இவர்கள். நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன், ஆட்சிக்கு வந்தபின் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்.

ஜெயலலிதா மரண வழக்கு: முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்!

எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல ஸ்டாலின் தான் காரணம் என்றால் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் இருந்த நீங்கள் என்ன செய்தீர்கள்? என் மீது வழக்கு தொடுக்க வேண்டியது தானே? நான் சந்திக்கத் தயார். நீங்கள் தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு அனைத்தையும் திரட்டி ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே சில பிரச்னைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன” என்றார்.

இதையும் படிங்க...முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ABOUT THE AUTHOR

...view details