தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2020, 11:28 AM IST

ETV Bharat / state

‘பாஜக கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு செய்யும்’ - அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: நீடாமங்கலம் அருகே உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காள்ர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜ், பாஜகவுடனான கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் காமராஜ்
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் காமராஜ்

திருவாரூர் நீடாமங்கலம் அருகே உள்ள கொட்டையூர், அரவூர், பையித்தஞ்சோி, மாணிக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு வெற்றிபெற்ற வேட்பாளர்களுடன் சென்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறுகையில், ‘முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோாின் வழிகாட்டுதலின்படி, திட்டங்கள் முழுவதும் மக்களிடம் சென்றடைவதால், மக்கள் ஆதரவு தருகிறார்கள். அந்த ஆதரவுதான் எங்களுடைய வெற்றியாகக் கருதுகிறோம்.

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் காமராஜ்

வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரும்பாத எந்த திட்டங்களையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு அதிமுக அமைச்சர் ஆதரவு?

ABOUT THE AUTHOR

...view details