தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னார்குடி அருகே தூர்வாரப்படும் குளத்தை ஆய்வு செய்த அமைச்சர்! - Thiruvarur District News

திருவாரூர்: மன்னார்குடி அருகே உள்ள அவளிவநல்லூர் கிராமத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வரும் குளத்தை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூர்வாரப்படும் குளத்தை ஆய்வு செய்த அமைச்சர்
தூர்வாரப்படும் குளத்தை ஆய்வு செய்த அமைச்சர்

By

Published : Jun 5, 2020, 8:42 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அவளிவநல்லூர் கிராமத்தில் உள்ள குளம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறியதாவது, “கிராமப் பகுதிகளில் தூர்வாரப்படாத குளங்கள் தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தால், அந்த குளங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும். மேலும் மக்கள் விரும்புகின்ற திட்டங்களை தான் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என்றார்.

அதுபோல டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறு மற்றும் வாய்க்கால்கள் விரைவாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. உலக அளவில் கணக்கிடுகின்ற போது தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இறப்பு விகிதம் 0.8 விழுக்காடாக உள்ளது. எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மிக சீரிய முறையில் எடுத்து மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:4 மாத குழந்தைக்கு பால் வழங்கிய மனிதநேய காவலருக்கு அமைச்சர் சன்மானம்!

ABOUT THE AUTHOR

...view details