குளத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு! - Recovery of female corpse in a decomposing state in the pool Female body recovered in pond near Kottur Thiruvarur District News
திருவாரூர்: கோட்டூர் அருகே உள்ள வடக்கு வாட்டார் கிராமத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
![குளத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு! கோட்டூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10480170-34-10480170-1612323461524.jpg)
கோட்டூர்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள வாட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாசாமி. இவரது மனைவி மனோமணி (70) சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டவர்.
கடந்த 28 நாள்களுக்கு மேலாக மனோமணி காணவில்லை என அவரது உறவினர் பல இடங்களில் தேடிவந்த நிலையில், நேற்று (பிப். 2) அப்பகுதி பெருமாள் கோயில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர் கோயில் குளத்திற்கு மாடுகளை ஓட்டிச் சென்றபோது குளத்தில் ஒரு பெண் சடலம் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையும் படிங்க: 'எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்'