தமிழ்நாடு

tamil nadu

வாகன சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்!

திருவாரூர்: நன்னிலம் அருகே காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்திவரப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிமாநில சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

By

Published : Oct 23, 2019, 5:05 PM IST

Published : Oct 23, 2019, 5:05 PM IST

Liquor seized

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி-காரைக்கால் பிரதான சாலையில் திருக்கொட்டாரம் என்ற இடத்தில் காவல் உதவி ஆய்வாளர் திருக்குமரன் தலைமையிலான சிறப்புக் காவல்படையினர் நள்ளிரவு இரண்டு மணிக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது, காருக்குள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து கடத்திவரப்பட்ட மூன்றாயிரத்து 250 சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. சோதனையின்போது காரில் வந்த இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.

கடத்திவரப்பட்ட சாராய பாக்கெட்டுகள்

கார் ஓட்டுநரை கைது செய்து பேரளம் காவல் துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: திருவாரூர் முருகன் கொள்ளை கும்பலின் தலைவனா?

ABOUT THE AUTHOR

...view details