தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள் - #caaprotest

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட வீடுகளில், 'வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ!' என கோலம் வரைந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

#nrcprotest
#nrcprotest

By

Published : Dec 31, 2019, 11:47 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சியினரும் மாணவர்களும் இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்டு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தற்கு, அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் தங்களின் வீடுகளில் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலங்கள்

அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நெய்விளக்கு தோப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீடுகளின் முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோலமிட்டனர்.

இதையும் படிங்க:

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details