தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் தர மறுத்த மகன்- விரக்தியில் தந்தை தற்கொலை - tiruvarur crime news

திருவாரூர்: நன்னிலம் அருகே செலவுக்கு மகன் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த அவரது தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை
தந்தை

By

Published : Jul 13, 2021, 10:25 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள திருவாஞ்சியம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளர் காசிநாதன் (60). இவர் தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்குச் செல்லாததால் வீட்டிலிருந்துள்ளார்.

இதனால் செலவுக்குத் தனது மகன் பாலசுப்பிரமணியனிடம் செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். மகன் தற்போது பணம் இல்லை எனக் கூறியதால் மனமுடைந்த தந்தை காசிநாதன் விரக்தியில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல

உடனே வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து நன்னிலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:பெற்ற மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் தந்தை தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details