தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 25, 2022, 11:04 PM IST

ETV Bharat / state

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் பனிப்பொழிவால் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
பனிப்பொழிவால் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்படுகிறது

திருவாரூர்:இந்தாண்டு மூன்று லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பனி பெய்து வருவதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு சென்றால் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் காரணம் காட்டி அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

மேலும், காலை நான்கு மணி முதல் மதியம் ஒரு மணி வரை பனி தொடர்ந்து பெய்து வருவதால் நெல்லை காய வைப்பதற்கு சிரமமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு பனி பெய்து வரும் நேரத்திலும் அனைத்து நெல் மூட்டைகளையும் ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் நிபந்தனையுடன் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details