தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயியைத் தாக்கிய நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்! - விவசாயியை தாக்கிய நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்

திருவாரூர்: ஸ்ரீவாஞ்சியம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்துவந்த விவசாயிகளை தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயியை தாக்கிய நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்
விவசாயியை தாக்கிய நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்

By

Published : Feb 22, 2021, 7:43 PM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் அருகேவுள்ள அபிஷேக கட்டளைக் கிராமம் தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், தனக்குச் சொந்தமான 53 நெல் மூட்டைகளை ஸ்ரீவாஞ்சியத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக, கடந்த பிப்.15ஆம் தேதி வைத்துள்ளார்.

நெல் வைத்து ஒரு வாரம் ஆன நிலையிலும், நெல் மூட்டைகள் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அங்கு பணிபுரியும் அலுவலர்களிடம் கேட்டபோது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குப் பணிபுரிந்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள், விவசாயி அசோக்குமாரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளாகும் விவசாயி!

தாக்குதலில் படுகாயமடைந்த விவசாயி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கனமழையால் நெல் மூட்டைகள் சேதம்

ABOUT THE AUTHOR

...view details