திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள், நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம்வரை மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த மருத்துவமனையில் புற நோயாளிகள் 500க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவக் கல்லூரி எதிர்புறம் உள்ள கடைகளில்தான் காலை உணவு, மதிய உணவு டீ, பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகள் அனைத்தையும் வாங்கிச் செல்கின்றனர். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரனுக்கு அந்த கடைகளில் காலாவதியான பிரட் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது.