திருவாரூர்:தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி தலைமையிலான குழுவினர் பேரளம் டு காரைக்கால் சாலையில் உள்ள பண்டாரவாடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.