திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா மணவாளநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(48). இவர் தற்போது மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
இவர் நேற்றிரவு(அக்.08) ஏரவாஞ்சேரியிலிருந்து அவரது சொந்த ஊரான மணவாளநல்லூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தேதியூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே நான்கு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கணேசனை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.