தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2020, 1:11 PM IST

ETV Bharat / state

நன்னிலத்தில் கனமழை: பயிர்கள் சேதம்

திருவாரூர்: நன்னிலம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்றிலிருந்து விடிய விடிய பெய்துவரும் கனமழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Heavy rains damage crops in Nannilam  crops damage  நன்னிலத்தில் கன மழை பொழிவு  நன்னிலத்தில் பெய்த கனமழையில் பயிர்கள் சேதம்  Damage to crops due to heavy rains in Nannilam  Telta District Rain Damage
Telta District Rain Damage

தமிழ்நாட்டில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிலிருந்து (டிச. 30) கனமழை பெய்துவருகிறது.

பயிர்கள் சேதம்

குறிப்பாக நன்னிலம், ஆண்டிப்பந்தல், கொல்லுமாங்குடி, பேரளம், கமுகக்குடி, திருக்கொட்டாரம், காளியாகுடி, இஞ்சிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துவருகிறது.

இந்தத் தொடர் கனமழையால், நன்னிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராகியிருந்த சம்பா, நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனிடையே, பொதுமக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புரெவி புயல்: உதகையில் கொட்டும் மழை!

ABOUT THE AUTHOR

...view details