திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேருக்கும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் என 6 பேர் முழுவதுமாக குணம் அடைந்தனர்.
இதையடுத்து, மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு முன்பாக அவர்கள் தனிமையாக அமர வைக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உற்சாகமாக கைத்தட்டி, அவர்களை அவரவர் வீடுகளுக்குத் தனி ஆம்புலென்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.