தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

திருவாரூர்: மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு
மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு

By

Published : Mar 2, 2021, 3:02 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மத்திய பாதுகாப்பு படையினர் தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் நன்னிலம் கூடுதல் காவல் கண்காணிபாளர் கார்த்திக் தலைமையில் அணிவகுத்து சென்றனர்.

மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு

நன்னிலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய அணிவகுப்பானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு நிறைவு பெற்றது. இதில் 170 காவல் துறையினர், 70 மத்திய பாதுகாப்பு படையினர் என மொத்தம் 240 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு

ABOUT THE AUTHOR

...view details