திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த 2011ஆம் ஆண்டு சாலையோரம் இருந்த 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
இந்நிலையில், தற்போது சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி, பழக்கடைகளை அப்பகுதியில் நடத்தி வருகின்றனர். இதனிடையே, சாலையோரத்தில் கடைகள் நடத்தக்கூடாது எனக் கூறிய பொன்னேரி நெடுஞ்சாலைத்துறையினர், அவற்றை அகற்ற முயன்றனர்.