திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாகவே மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.
"வாவ்...இது நம்ம பீமன் நீர் வீழ்ச்சியா?!"- திருவண்ணாமலையில் குவியும் மக்கள்! - javadumalai
திருவண்ணாமலை: கனமழையின் காரணமாக ஜவ்வாதுமலை பீமன் நீர்விழுச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
javadumalai
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலான கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள கோலப்பன் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள பீமன் நீர் வீழ்ச்சியில் கனமழையின் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. பீமன் நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வரத்தொடங்கியுள்ளனர்.