தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் காலநிலை தழுவல் குறித்த கருத்தரங்கு - இந்தோ ஜெர்மன் கார்ப்பரேஷன் திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் கருத்தரங்கு

திருவண்ணாமலை: நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

இந்தோ ஜெர்மன் கார்ப்பரேஷன் திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் கருத்தரங்கு
இந்தோ ஜெர்மன் கார்ப்பரேஷன் திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் கருத்தரங்கு

By

Published : Jan 30, 2020, 8:30 AM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தேசிய நீர் இயக்கம் சார்பாக நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தோ ஜெர்மன் கார்ப்பரேஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பழனிச்சாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

திருவண்ணாமலையில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் கருத்தரங்கு

பின்னர் இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2020ஆம் ஆண்டிற்கான சுகாதார கையேட்டினை வெளியிட்டு பேசிய அவர், "திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய நோக்கம் மழைநீர் சேமித்தல், பாதுகாத்தல், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் பல்வேறு துறைகளுடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது" என்றார்.

இந்தோ ஜெர்மன் கார்ப்பரேஷன் திட்டத்தின்கீழ் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் கருத்தரங்கு

மேலும், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறித்து ஆய்வுமேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 250 வகையான பல்வேறு பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இயற்கை வளம், நீர் மேலாண்மை, தனிநபர் கழிப்பறை, விவசாய நில மேம்பாடு உள்பட பல்வேறு பணிகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று !

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details