தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சாதிய ஆணவ படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்றுக!' - Thiruvannamalai

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டித்தும் அதனை தடுக்கும்விதமாக தனிச்சட்டம் இயற்றக் கோரியும் அண்ணா சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசிக

By

Published : Jul 28, 2019, 7:47 AM IST

  • சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால் அவர்களை பெற்றோரே படுகொலை செய்யும் அவலம் தொடர்வதைக் கண்டித்தும்,
  • சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்றக் கோரியும்,
  • சாதிய ஆணவ படுகொலை செய்யும் கூலிப்படை கும்பல்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும்,
  • தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது மேட்ரிமோனி என்ற பெயரில் இயங்கிவரும் திருமணத்தகவல் மையங்களை தடை செய்யக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

'சாதிய ஆணவ படுகொலைகளை' கண்டித்து விடுதலை சிறுத்தைகள்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு, வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details