திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே அல்லிகொண்டபட்டு என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இருதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை, ஜான் பீட்டர் மற்றும் சாணார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், வள்ளிமலை கிராமத்தை சேர்ந்த முரளி என்பவர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.