தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் பூட்டை உடைத்து 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே உள்ள ஜெயின் கோயிலின் பூட்டை உடைத்து இரண்டு ஐம்பொன் சிலைகள் திருடியவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

By

Published : May 9, 2020, 10:20 AM IST

கோயில் பூட்டை உடைத்து 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு
கோயில் பூட்டை உடைத்து 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகே ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்றிரவு கோயில் பாதுகாவலர் வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது 25 ஆயிரம் மதிப்பிலான 7 அங்குலம் முனிஸ்வரத தீர்த்தங்கர், 5 அங்குலம் சாந்தி தீர்த்தங்கர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்தவாசி காவல் துறையினர் திருடுபோன இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் திருவண்ணாமலையிலிருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைத்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

தடயங்களை சேகரிக்கும் தடவியல் நிபுணர்

கோயிலில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படாததால் குற்றவாளிகள் யார் என்பதை அறிவதில் காவல் துறையினருக்கு சவாலாகவே இருக்கிறது. இருந்தபோதிலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபர்களை விரைவில் பிடிக்க தீவிரம் காட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: குழி தோண்டியபோது அம்மன் சிலை கண்டெடுப்பு - புதைந்திருந்த வரலாற்று நிகழ்வுகள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details