திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள துருகம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் (25). சரவணராஜி (25), சிவகுமார் (24) இவர்கள் மூவரிடமும் காவல் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறிய இரண்டு பேர் அவர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிவகுமார் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சரவணக்குமாருக்கு உத்தரவிட்டார்.