தமிழ்நாடு

tamil nadu

ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 6 பேர் கைது

திருவண்ணாமலை: ஜவ்வாது மலையிலிருந்து ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற ஆறு பேரை ஜமுனாமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

By

Published : Feb 18, 2020, 9:42 AM IST

Published : Feb 18, 2020, 9:42 AM IST

ஆறு பேர் கைது
ஆறு பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையிலிருந்து ஆறு பேர் கொண்ட கும்பல் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திரா பகுதிக்கு வாகனத்தில் வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக ஜமனாமுத்தூர் காவல் துறையினர் பீமன் பால்ஸ் கூட்டுச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை காவல் துறையினர் மறித்தனர். அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் காவல் துறையினரைப் பார்த்துவிட்டு வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். பின்னர் காவல் துறையினர் வனப்பகுதிக்குச் சென்று தப்பிச்சென்ற ஆறு பேரையும் கைது செய்தனர்.

ஆறு பேர் கைது

அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜமுனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, பிரபு, பொன்னுசாமி, குப்புசாமி, கணேசன், சத்யராஜ் ஆகியோர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேல் முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 6 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details